lundi 30 septembre 2013

கூட்டமைப்பு பதவிப்பிரமாணம் சிறிலங்கா அதிபருக்காக காத்திருக்கிறோம்


யாழ்ப்பாணத்தில் வைத்து, வடக்கு மாகாணசபை முதல்வர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திடீர் அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு இதுதொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமெரிக்காவில் இருந்து திரும்பும் சிறிலங்கா அதிபருக்காக காத்திருக்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதல்வருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்தே சிறிலங்கா அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாகாணசபைக்கள் சட்டத்தின்படி, மாகாண முதலமைச்சர், சிறிலங்கா அதிபர் முன்னிலையிலோ ஆளுனர் முன்னிலையிலோ பதவியேற்க முடியும்.

ஆனால் மாகாண அமைச்சர்கள், முதலமைச்சரின் முன்பாக பதவியேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire