dimanche 22 septembre 2013

தமிழர் நள் ஆசியுடன் மூன்றாவது சக்தியாக பொன்சேகாவின் கட்சி

முன்னாளர் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக கட்சி நடந்து முடிந்த மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலில் மூன்றாவது சக்தியாக உருவாகியுள்ளது.
கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக கூடுதலான வாக்குகளை பெற்று மூன்றாவது அணியாக உருவெடுத்த மக்கள் விடுதலை முன்னணியை நான்காம் அல்லது ஐந்தாம் இடத்திற்கு தள்ளியே மூன்றாவது சக்தியாக ஜனநாயக கட்சி உருவாகியுள்ளது.
இவ்விரு மாகாணங்களிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கு கூடுதலாக ஜனநாயக கட்சி வாக்குகளை பெற்றுள்ளதுடன் ஆசனங்கள் சிலவற்றையும் பெற்றுகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire