dimanche 9 août 2015

தலிபான்கள் தாக்குதல்: 29 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு நடத்தப்பட்ட தலிபான்கள் தாக்குதலில் 29 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வடக்கு ஆப்கானிஸ்தானில் குர்தீஸ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தாலிபான் தீவிரவாதிகள் சனிக்கிழமை இரவு நடத்திய தற்கொலை தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 5 பேர் தலிபான்களுக்கு எதிராக மறைமுகமாக செயல்படும் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மற்றவர்கள் பொதுமக்கள் ஆவார்கள். மேலும் இந்த தாக்குதலில் 19 பேர் மோசமாக காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் தலிபான் தலைவர் முல்லா ஒமர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தெரிவித்த நிலையில், இந்த தாக்குதல் நடந்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire