lundi 31 août 2015

ஒசாமா பின்லேடன் இன்னமும் அமெரிக்க உளவு அமைப்பின் ஊதியம் பெறும் பட்டியலில்

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார் என்ற பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்  எட்வர்ட் ஸ்நோடென். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையத்தை தகர்த்த அல் கொய்தா அமைப்பின் தலைவரான ஒசாமா  பின்லேடன் பாகிஸ்தானில் தலைமறைவாக தங்கியிருந்த போது அமெரிக்க அதிரடிப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்லேடனை தீர்த்துக்  கட்டியது அமெரிக்காவின் சாதனையாக கூறப்பட்டது.

இந்த நிலையில் அமெரிக்கா குறித்த பல ரகசியங்களை அம்பலப்படுத்தி சர்ச்சையில் சிக்கி தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள ஸ்நோடென்தான்  இந்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் மாஸ்கோ டிரிப்யூனுக்கு ஸ்நோடென் அளித்த பேட்டியில் ஒசாமா பின்லேடன் பஹாமாசில்  இருப்பதாகவும், அவர் அமெரிக்க உளவு அமைப்பின் ஊதியம் பெறும் பட்டியலில் இன்னமும் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்கான ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாகவும், சிஐஏவிடமிருந்து அவர் மாதந்தோறும் ஒரு லட்சம் டாலர் பெற்று வருவதாகவும் கூறியுள்ள  ஸ்நோடென், பின்லேடன் தற்போது தனது ஐந்து மனைவிகள் மற்றும் பல குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில்  வெளிவரவுள்ள தனது நூலில் ஆதாரங்களை தாம் வெளியிடப்போவதாகவும் ஸ்நோடென் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire