dimanche 2 août 2015

இங்கிலாந்தில் இறந்தது ஒசாமா பின்லேடனின் உறவினர்கள் தான் என ஆங்கில செய்தி நிறுவனங்கள் செய்தி


கொல்லப்பட்ட அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ப்பு தாய் மற்றும் சகோதரி, இன்று இங்கிலாந்தில் நேரிட்ட பயங்கர விமான விபத்தில் பலியாகியுள்ளனர்.
  
தெற்கு இங்கிலாந்தில் பின் லேடன் குடும்பத்திற்கு சொந்தமான தனியார் ஜெட் விமானத்தில், அவரின் வளர்ப்பு தாயும், சகோதரியும் இங்கிலாந்தில் உள்ள பிளாக்புஷ் விமான நிலையத்துக்கு பயணம் செய்தனர்.

ஜெட் விமானத்தை விமான நிலையம் அருகே தரையிறக்கம் செய்த போது, திடீரென அந்த ஜெட் விமானம் நிலை தடுமாறி அருகில் இருந்த கார் நிறுத்துமிடத்தில் மோதி வெடித்து சிதறியது. அதில் பயணம் செய்த ஒசாமாவின் உறவினர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ஜெட் விமான விபத்தில் இறந்தது ஒசாமா பின்லேடனின் உறவினர்கள் தான் என ஆங்கில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வந்தாலும் அதிகாரப்பூர்வமாக இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. சமூக வலைதளங்களிலும் உயிரிழந்தவர்கள் ஓசாமா பின்லேடனின் உறவினர்கள் என்ற செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Aucun commentaire:

Enregistrer un commentaire