vendredi 7 août 2015

விஜயகலா மன்னன்னை ஈழக் கோரிக்கைக்கு ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லையாம்

ஈழக் கோரிக்கைக்கு ஒரு போதும் ஆதரவளிக்கப் போவதில்லை என பிரதி அமைச்சர்  விஜயகலா மன்னன்னை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஒருபோதும் ஏற்படப் போவதில்லை எனவும் விஜயகலா மன்னன்னை  தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் சில தரப்பினர் அடிப்படையற்ற வகையில் தம்மைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த

இவ்வாறான பிரச்சாரங்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ வரைப்படத்தில் வேட்பாளரின் உருவப்படத்தைப் பொறித்து தெற்கில் முரண்பாட்டு நிலைமைகளை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது என வட்டுக்கோட்டை தீர்மனத்தைப்பற்றி தெரியாத விஜயகலா மன்னன்னை மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire