dimanche 16 août 2015

குறைந்தது 40 அகதிகள், கப்பல் ஒன்றில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலிக்கு அருகில், குறைந்தது 40 அகதிகள், கப்பல் ஒன்றில் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கப்பலின் கீழ் தளத்தில், மூச்சுத் திணறி மாண்டதாக நம்பப்படுகிறது.இத்தாலியையும் கிரீசையும் சென்றடைய, ஆயிரக்கணக்கில் அகதிகள் முயன்றுவருவதைத் தொடர்ந்து, அந்தச் சம்பவம் ஏற்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் ஆக மோசமான அகதிகள் பிரச்சினை அதுவென்று கூறும் ஐரோப்பிய ஒன்றியம், அதனைக் கையாள முயற்சி மேற்கொண்டு வருகிறது.போர், பேரிடர், வறுமை ஆகியவற்றால், அகதிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியது.

Aucun commentaire:

Enregistrer un commentaire