mercredi 29 juillet 2015

போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில்

இந்திய கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக அந்நாட்டின் தேசிய அபாயகர மருந்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டாக்டர் நிலங்க  சமரசிங்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்..இந்தியா - இலங்கைக்கு இடையிலான போதைப் பொருள் பரிமாற்றம் பெரும்பாலும் தென் இந்திய கடற்பரப்பினூடாகத்தான் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்த சமரசிங்க, இதைத் தடுப்பதற்காகவே பிராந்திய தகவல் நிலையமொன்றை அமைப்பதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக இந்தியா விஷேச ஒத்துழைப்பை அளித்துவருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் போதைப் பொருட்கள் மீனவப் படகுகள் மூலமே இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்திய கடற்பரப்பினூடாக முன்னெடுக்கப்படும் போதைப் பொருள் கடத்தலை தடுக்கும் நோக்குடன், இந்திய, பாகிஸ்தான் , நேபாளம், பர்மா, மாலத் தீவு மற்றும் இலங்கைக்கு இடையில் பிராந்திய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் உதவியுடன் ஆசிய தகவல் பறிமாற்ற சபை ஒன்றை இலங்கையில் நிறுவ நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.இது  பொலிஸ் போதைப்­பொருள் தடுப்­புப்­பி­ரிவின் பணிப்­பா­ளரை தொடர்பு கொண்டு கேட்டோம். கைப்­பற்­றப்­பட்ட போதைப்­பொ­ருட்­க­ளுக்கு என்ன நடக்­கி­றது என்­பதை அவர் பின்­வ­ரு­மாறு விளக்­கினார்:
எந்த ஒரு திணைக்­க­ளத்­தனாலும் கைப்­பற்­றப்­படும் போதைப்
பொ­ருள் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ரி­டமே கைய­ளிக்­கப்­படும். இவ்­வாறு கைய­ளிக்­கப்­படும் அல்­லது போதைப் பொருள் தடுப்புப் பிரி­வி­னரால் கைப்­பற்­றப்­படும் போதைப்­பொ­ருட்கள்  முதலில் முழு­மை­யாக   போதைப் பொருள் தடுப்பு பிரிவால் அரச இர­சா­யனப் பகுப்­பாய்­வாளர் திணைக்­க­ளத்­துக்கு  ஒப்­ப­டைக்­கப்­படும். 
அங்கு பரி­சோ­த­னைகள் நடத்­தப்­பட்டுஇ கைப்­பற்­றப்­பட்ட பொருட்கள் போதைப் பொருட்­கள்தான் என உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால்,உரி­ய­மு­றையில் சீல்­வைக்­கப்­பட்டு இர­சா­யனப் பகுப்­பாய்­வாளர் திணைக்­க­ளத்தால் நீதி­மன்­றத்­துக்கு கைய­ளிக்­கப்­படும்.கைப்­பற்­றப்­ப­டு­கின்ற ஹெரோயின் போதைப் பொருட்கள் தொடர்­பான வழக்­குகள் நீதிவான் நீதி­மன்றம் மற்றும் மேல் நீதி­மன்­றங்­களில் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. 500 மில்­லி­கி­ரா­முக்கு குறை­வான ஹெரோயின் கைப்­பற்­றப்­படும் போது அது தொடர்­பான வழக்கு நீதிவான் நீதி­மன்­றத்­திலும் 500 மில்­லி­கி­ரா­முக்கு மேற்­பட்ட  ஹெரோயின் தொடர்பா வழக்­குகள் மேல் நீதி­மன்­றத்­திலும் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­படும்.இவ்­வாறு  கைய­ளிக்­கப்­படும் ஹெரோயின் தொடர்­பான வழக்கு நட­வ­டிக்­கைகள் நிறைவு பெற்ற பின்னர் தண்­ட­னைச்­சட்டக் கோவையில்  உறுப்­புரை 425 முதல் 433 இல் கூறப்­பட்­டுள்ள முறை­மைக்கு அமைய ஹெரோயின் அழிக்­கப்­படும்.

தீர்ப்பு வழங்­கிய நீதி­பதிஇ பொலிஸ் போதைப்­பொருள் தடுப்பு பிரிவின் பணிப்­பாளர் அல்­லது அவ­ரது பிர­தி­நி­தி­யான ஓர் உயர் அதி­காரிஇ நீதி­மன்ற பதி­வாளர்இ தேசிய அபா­ய­க­ர­மான ஒள­டத கட்­டுப்­பாட்டு சபையின் அதி­கா­ரிகள்இ சட்­டத்­த­ர­ணிகள், நீதி­ப­தியின் அனு­ம­திக்கு இணங்க ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஆகி­யோரின் முன்­னி­லையில் இர­க­சி­ய­மாக அல்­லாமல் திறந்த இடத்தில் இந்த அழிப்பு நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும்.  கைப்­பற்­றப்­பட்ட ஹெரோயின் தண்­ணீரில் கரைக்­கப்­பட்டு மல­ச­லக்­கூட குழியில் ஊற்­றப்­பட்டு அழிக்­கப்­படும்.

இந்தப் போதைப் பொருட்கள் கடலில் கரைத்து அழிப்­பதால் சூழல் மாச­டை­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதி­க­மாக உள்­ளன. அதே­வேளை அப்­போதைப் பொருட்கள் தீயிட்டு அழிக்­கப்­ப­டு­மானால் சமூ­கத்­தி­லுள்ள, போதைப் பொருள் உப­யோ­கிக்­காத மக்­களின் ஆரோக்­கி­யத்­துக்கு பாதிப்பு ஏற்­படும் என்ற நோக்கில் இந்த முறைகள் தவிர்க்­கப்­ப­டு­கின்­றன. அதனால் தண்ணீரில் கரைக்­கப்­பட்டு மல­ச­ல­கூட குழியில் ஊற்றி அழிக்­கப்­ப­டு­கின்­றன.

பெரும்­பாலும் நீதி­மன்ற வளா­கத்தில் உள்ள மல­ச­லக்­கூட குழி­க­ளி­லேயே இவ்­வாறு கரைத்து ஊற்­றப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்தார் அவ்­வா­றால்­லாமல் வேறு ஒரு இடத்தில் இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­டு­மானால் குறித்த இடத்­துக்கு மேற்­படி அதி­கா­ரிகள் அனை­வரும் வரு­கை­தர வேண்டும்' என அவர் கூறினார்.கஞ்சா போன்ற போதைப்­பொ­ருட்­களும் அழிக்­கப்­ப­டு­கின்­றன. அண்மைக் கால­மாக நாட்டில் பல்­வே­று­பட்ட போதைப் பொருள் சுற்­றி­வ­ளைப்­புகள் இடம் பெற்­று­வ­ரு­கின்­றன. ஹெரோயின் தொடர்பில் 12,000 இற்கும் அதி­க­மா­ன­வர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊட­கப்­பி­ரிவின் தர­வுகள் தெரி­விக்­கின்­றன.

பொலி­ஸாரால்  இலங்­கையில் செயற்­பட்டு வரு­கின்ற இந்த போதைப் பொருள் வலை­ய­மைப்பை முடக்­கு­வ­தற்­கான பல்­வேறு நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. உள்­நாட்டில் மாத்­தி­ர­மல்­லாது சர்­வ­தேச அளவில் இந்த போதைப்­பொருள் மோசடி நீண்டு செல்வதாகவும் சர்வதேச அளவில் இருந்து செயற்படும்  போதைப் பொருள் செயற்பாட்டாளர்களை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியையும் இலங்கை பொலிஸார் நாடியுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர்  தெரிவித்துள்ளார்.போதையற்ற ஓர் உலகை கட்டி யெழுப்பவும்,எதிர்கால சமூகத்துக்கு ஒரு சிறந்த உலகை கையளிக்கவும் இந்த ஆபத்தான போதைக் கெதிராக ஒவ்வொரு  மனினும் தன்னால் முடியுமான முயற்சிகளை செய்ய முன்வரவேண்டியது காலத்தின் தேவையாகும்

Aucun commentaire:

Enregistrer un commentaire