dimanche 12 juillet 2015

செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நான்கு வகையான திட்டம் நாசா

1239செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இந்திய  வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இடம் பெற்றுள்ளதாக நாசா  அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் லட்சியமான செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை  அனுப்பும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா செயல்படுத்தி  வருகிறது. அவ்வகையில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்ப நான்கு வகையான  திட்டத்தை கையில் எடுத்துள்ள நாசா 2030 ஆம் ஆண்டிற்குள் செவ்வாய்  கிரகத்தில் மனிதர்களை தரையிறக்க திட்டமிட்டுள்ளது.
முதல் கட்டமாக 2017 –ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும்  ராக்கெட்டை நாசா உருவாக்கி வருகிறது. இந்த சாதனை பயணத்திற்காக சுனிதா  வில்லியம்ஸ், ராபர்ட், டக்லஸ் ஹர்லி ஆகியோரை தேர்வு செய்துள்ள நாசா  அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire