jeudi 16 juillet 2015

நாய்களை அகற்ற ஒரே வழி தேர்தலை புறக்கணிப்பதே!!!

ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருக்கையில் இன்று பிரதானமாக தமிழ் அரசியலை வழிநடத்திக் கொண்டிருப்பவர்கள் கிடங்கு நாய்கள் என்றார். இந்த நாய்களைப் பற்றி அறிந்திருக்கின்றேன் ஏன் நானும் எனது உறவினர்களின் வீட்டுக்குப் போகும் போது இந்த வகை நாய் இருப்பதால் உடனடியாக வீட்டுக்குள் செல்ல முயற்சிப்பதில்லை. வீட்டில் உள்ளவர்கள் அந்த நாயை பாதுகாப்பாக கட்டிவிட்டார்களா என்று பார்த்தபின்னரே உள்ளே செல்வேன்.


சரி இந்த கிடக்கு நாய் என்ற சொல்லாடலை நேற்றுத் தான் உரையாடலின் மூலம் அறிந்தேன். அந்த நாய்  உரியவை விட மற்றவர்கள் யாரை என்றாலும் கடிக்கும். அதற்கு தன்வீட்டில் உறவில் உள்ள உறுப்பினர்கள் யார் என்று தெரியாது. அது வீட்டுச் சொந்தக் காரனின் சொந்தப் பிள்ளையைக் கூட கடித்துக் குதறும்.

அது சரி கிடக்கு நாய்க்கும் தமிழ் அரசியலிங்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுவது இயல்பே.


உளவாளிகள்- ஏவலாளிகள் 
ஆம் அதுதான் அன்னிய சக்திகளின் உளவுப்பிரிவிற்காக வேலை செய்பவர்கள்.
அன்னிய மூலதனத்திற்காய் சேவகம் செய்பவர்கள்
அன்னிய நிகழ்ச்சி நிரலை சிரமேற்கொண்டு செயற்படுபவர்கள்.
தமிழ் தேசியத்தின் உரிமையை மீட்டெடுக்க வாக்குக் கேட்பவர்கள்
இன்று தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மீட்டெடுப்பதற்காய் வாக்குக் கேட்பவர்களை வழிநடத்துவது அன்னிய சக்திகளே. சீன, இந்திய, மேற்கு ஏகாதிபத்தியங்களின், பௌத்த – சிங்கள பேரினவாதத்திற்கு முண்டு கொடுக்கின்றார்கள்.


மேட்டுக்குடி அரசியல்வாதிகளுக்கு மக்களை விட பதவி. புகழ். அந்தஸ்து, பணம், சுயநலம், சுகபோகம், சலுகைகள் என்பவே முக்கியம்.
போலி முதலாளித்துவ ஜனநாயகத்தின் ஒரு அங்கமான தேர்தல் ஊடாக மக்களை ஏமாற்றுகின்றார்கள். ஜனநாயகம் இருப்பதான மக்களை ஏமாற்றுகின்ற அரசியலமைப்பும் அதன் தேர்தலும் இருக்கின்றது.
இதனைப் பயன்படுத்தி தன்கையால் தன் கண்ணைக் குத்துவதுபோல தேர்தல் ஊடாக மக்கள் தமது கண்ணைக் குத்திக் கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கின்றார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்கு வந்த பின்னர் ஏற்கனவே திட்டமிட்ட அரசியல் பொருளாதார நகர்வுகளை செயற்படுத்துவதற்கும் அதிகார வர்க்கம் இருக்கின்றது.  நாடாளுமன்றத்தில் தான் அனைத்து சட்டதிட்டங்களும் தீர்மானிக்கப்படுவதாக பாசாங்கு காட்டப்படுகின்றதேயன்றி அனைத்து தீர்மானங்களை தீர்மானிப்பதாக அன்னிய சக்திகளும், அவர்களின் நிதிநிறுவனங்கள் இருக்கின்றன.  சிங்கள- பௌத்த பெருந்தேசியவாதம் தனது வாக்கு வங்கியை காப்பாற்றிக் கொள்ள அனைத்து யுக்திகளையும் பயன்படுத்திக் கொள்கின்றது.



தொடரும் அடக்குமுறைகள்------

தமிழ் மக்களின் மீதான அடக்குமுறை இராணுவமும் அதுசார்ந்த உற்பத்திமுறையின் ஊடாக தமிழ் தேசத்தின் உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்திக் கொள்கின்றது. இங்கு பெரும் மூலதனச் செறிவைக்  கொண்டிருக்காத பெரும்பான்மை மக்களை பாதிக்கின்ற செயற்பாடாகும்.  இவை பற்றிய புரிதல் என்பது தமிழ் மேட்டுக்குடி அரசியல்வாதிக்கு இல்லை. இவர்கள் பசிக்கின்றது பாண் கேட்ட மக்களிடம் கேக் சாப்பிடுங்கள் என்று கூறிய அரசவம்சத்தின் சிந்தனையே இருக்கின்றது.


உளவுப்படைகளின் கண்கள் என்பது அதிகம் பேசப்படாத விடயமாகவும், மறக்கப்பட்ட விடயமாகவும் உள்ளது. இந்த கபட அரசியலை மேற்கொள்பவர்கள் இன- மத- வர்க்க பேதமற்று அரசியல் அமைப்புக்கள் இருக்கின்றார்கள்..  உரிமைகள் பற்றிப் பேசுகின்ற போது (Selective) தெரிவிற்குட்பட்டவையே அரசியல் கோரிக்கையாக முன்னிறுத்துகின்ற போது அவை  வரம்பிற்குட்பட்டவையாக இருக்கின்றது.
காணாமல் போனவர்கள், கட்டுப்பாட்டிற்குள், புனர்வாழ்விற்கு அனுப்பப்படுபட்டுக் கொண்டு இருக்கும் மக்களை இட்டு மேட்டுக்குடி அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்வார்கள் இல்லை. 

சம்பூரில் அனல்மின்நிலையத்தின் காணியைப் பற்றி எந்த அரசியல்வாதியும் மூச்சுவிடுவதாக இல்லை. சம்பூர் காணியைக் பற்றிக் கதைக்கின்ற போது கிடங்கு நாய்கள் இன்னொரு பாக்கிஸ்தான் நாய்கள் உள்ளதாக கட்டுக்கதை கட்டி விடுகின்றது.


ஆக மொத்தத்தில் தமிழ் தேசத்தின் மீதான அடக்குமுறை பல்திசைகளிலும் தொடர்கின்ற போது மேட்டுக்குடி கிடங்கு நாய்கள் தமிழ் மக்களின் உரிமையை சிதைப்பதற்கு துணைபோவர்களாகவே இருக்கின்றது.
முள்ளிவாய்க்காலுக்கு காரணமான கிடக்கு நாய்களின் செயற்பாடுகள் தொடர்கின்றது. தேர்தலுக்காக ஆண்டபரப்பரைக் கதைகளை வெவ்வேறு வடிவத்தில் கதைவிடுகின்ற கிடங்கு நாய் தமிழ் மக்களின் சாபமாக இருக்கின்றது.
கிடங்கு நாய்களை அகற்ற ஒரே வழி தேர்தலை புறக்கணிப்பதே!!!

 ஆக்கம் வேலன்

Aucun commentaire:

Enregistrer un commentaire