samedi 4 juillet 2015

சப்ரா"என்ற நிதி நிறுவனத்தை புலிகளின் நிதியில் நிறுவி 80 களில் பல கோடிகளை சுருட்டிய வித்தியாதரன் மீண்டும்

உதயன் - சுடர் ஒளி நாளிதழ்களின் ஆசிரியர் ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, எனினும் அவர் அந்த தகுதியை தக்கவைத்து கொள்ளாமல் இன்று அரசியலில் இறங்கியிருப்பது ஜீரணிக்க
முடியாத ஒரு விடயமாகவே உள்ளது.

உதயன் பத்திரிகையின் முதலாளி ஈ. சரவணபவன் யாழ்பாணத்தில் சப்ரா" என்ற நிதி நிறுவனத்தை நிறுவி 80 களில் பல கோடிகளை சுருட்டிக்கொண்டு நாட்டை ஓடி லண்டனில் இருந்துவிட்டு திரும்பி வந்து உதயன் பத்திரிகையை ஆரம்பித்து அதில் மறண அறிவித்தல்கள் மட்டும் பல கோடிகளை ஈட்டியவர்.

சரவணபவன் உதயனில் புலிகள் சார்பான செய்திகளை போட்டு அவர் செய்த நிதி மோசடியில் இருந்து புலிகளின் ஆதரவை பெற்றவர்.    

அவரின் மனைவியின் தம்பியான வித்தியாதரனை ஆசிரியராக நியமித்து அதில் வெற்றியும் கண்டவர், பின்னர் தனது பத்திரிகை பலத்தை வைத்து கூட்டமைப்பில் மந்திரியானவர்.

வித்தியாதரன் புலிகளை என்றும் ஆதரித்து செய்திகளை எழுதியதால் அவர் பிரபாகரனின் அன்புக்கு பாத்திரமானவரானார், ஒருமுறை அவரை அழைத்து விருந்தும் அளித்து கௌரவம் செய்தார், இது பழைய கதை.

இந்த பின்னணியோடு அன்டன் பாலசிங்கத்தோடு நெருங்கிய உறவை வித்தியாதரன் பேணியிருந்தார், இந்த பின்னணியை வைத்து கடந்த வடக்கு மாகாணசபை தேர்தலில் முதலமைச்சராக போட்டியிட மாவை சேனாதிராஜாவிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோதும் அதை சம்பந்தன் தடுத்தார்.

இந்த பின்னணியில் வித்தியாதரனுக்கு உதித்த சிந்தனைதான் முன்னாள் போராளிகளை இணைத்துக் கொண்டு அரசியலில் களமிறங்குவது, அதை கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்த்தியும் காட்டியுள்ளார்.

இன்று ஜனநாயக போராளிகள் கட்சி என்ற ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் போரில் விழுப்புண் கண்டு வாழ்க்கையில் வறுமையில் வாடும் போராளிகளை பலி பீடத்துக்கு மீண்டும் கொண்டு செல்வதுதான் அவரின் நோக்கமா?      நீங்கள் மேல் பார்த்த படங்கள் .பிரபாவுடன் வித்தியாதரன்.பாலசிங்கத்துடன் வித்தியாதரனின் குடும்பம்...இலங்கை அமைச்சர் ராஜிதவுடன் வித்தியாதரன்.. 

Aucun commentaire:

Enregistrer un commentaire