vendredi 4 mars 2016

பாகிஸ்தானில் பேஸ்புக்கில்பதிவு செய்த நபருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை..!

பாகிஸ்தானில் தேசத்திற்கு எதிராக மத ரீதியான முகநூல் பதிவு செய்ததற்காக 13 ஆண்டுகள் சிறை தண்டனை ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
ரிஸ்வான் ஹார்டெர் என்ற அந்த இளைஞர் மீது குறுங்குழு வாதத்தை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டதற்காகவும், நபிகள் நாயகம் குறித்து படம் வரைந்தது உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.
ஷியா பிரிவு முஸ்லீம் மீது நம்பிக்கை கொண்ட அந்த இளைஞருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும், 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். பாகிஸ்தான் சிறப்பு சிறை நீதிமன்ற நீதிபதி இந்த தீர்ப்பினை அளித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire