samedi 12 mars 2016

இந்தியாவில் முதன் முறையாக போர் விமானங்களை இயக்க மூன்று இளம் பெண்கள்

2015_10largeimg25_Sunday_2015_011932257-450x286விமானப்படைக்கு பைலட் பயிற்சி எடுக்கும் பெண்கள் நான்கு வருடங்களுக்குத் தாய்மைப் பேறு அடைய வேண்டாம் என்று, விமானப்படைத் தளபதி அறிவுறுத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் முதன் முறையாக போர் விமானங்களை இயக்க மூன்று இளம் பெண்கள் தேர்வாகி, அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள விமானப்படை விமான தளத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.பயிற்சி மற்றும் பணிகள் பாதிக்கும் என்பதால் குறைந்தது 4 வருடங்களுக்கு தாய்மைப் பேறு அடைய வேண்டாம் என்று விமானப்படைத் தளபதி இவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிய வருகிறது.
பைலட் பயிற்சி பெற்று வரும் இந்த மூன்று பெண்களும் ஜூன் 18ம் திகதி பணியில் சேர்வார்கள் என்று தகவல் தெரிய வருகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire