dimanche 13 mars 2016

ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தலுடன் 13 ஈழஅகதிகள் தாயகம்

tamilsஇந்திய அகதி முகாம்களில் தங்கியுள்ள ஈழஅகதிகளில் 13பேர் தாயகம் திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் இவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி தாயகம் திரும்பவிருப்பதாகவும், இதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து தாயகம் திரும்பும் இவர்களில் 8 ஆண்களும் 5 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு மீள்குடியமர்வதற்காக வருகை தருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire