vendredi 4 mars 2016

தீவிரவாத முறியடிப்பு சட்டம்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கும் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நேற்றுமுன்தினம் நடந்த ஜனநாயக சமூகத்தின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
”பயங்கரவாதச் சட்டத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசாங்கம், அதற்குப் பதிலாக அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்ப, தீவிரவாத முறியடிப்பு சட்டம் ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சிறிலங்கா அரசாங்கம், ஐ.நாவுடனும், ஏனைய மரபுசார் பங்காளர்களுடனும் ஏற்பட்டிருந்த முரண்பாடுகளை நீக்கி, அனைத்துலக சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire