mercredi 2 mars 2016

கேரள மாநில கிறிஸ்துவ போதகருக்கு 40 ஆண்டு சிறை

திரிச்சூர் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிறிஸ்தவ போதகருக்கு 40 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டயம், கருக்கச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சனல் கே ஜேம்ஸ் (37), கிறிஸ்தவ போதகராக உள்ளார். இவர், அருகில் உள்ள குடியிருப்புக்கு சென்று அடிக்கடி ஊழியம் செய்து வந்தார். கடந்த 2014–ம் ஆண்டு குடியிருப்புக்கு சென்றபோது, ஒரு குடும்பத்தினருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர்களின் 12 வயது சிறுமியை போதகர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
தனது தோழியிடம் கூறிய சிறுமி, தானும் அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த தகவல் பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிய வந்தது. உடனே கோட்டயம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி போதகர் சனல் கே ஜேம்சை கைது செய்தனர்.
அவர் மீது சிறுமிகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பான வழக்கு திருச்சூர் கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி போதகர் சனல் கே ஜேம்ஸ் குற்றவாளி என்றும், அவருக்கு 40 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தாருக்கு மாநில அரசு ரூ.3 லட்சம் நிவாரண நிதி அளிக்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire