dimanche 28 février 2016

புகழ் பூத்த எழுத்தாளர் செங்கை ஆழியான் இன்று காலமானார்.

வாடைக்காற்று எழுதினாரே, அவரா?" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற்று என்ற நாவலின் மூலம் ஒரு முகவரி தேடிக்கொண்டவர் எழுத்தாளர் செங்கை ஆழியான். வாடைக்காற்று நவீனம், நாவல் உலகில் ஒரு மைல்கல் செங்கை ஆழியன் என அறியப்படும் க.குணராசா இன்று தனது 75 வது வயதில் காலமானார். சிறிது காலமாக சுகயீனமுற்று  இருந்த அவர்,  யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மதியம் காலமானார்.
1941 இல் பிறந்த செங்கை ஆழியான், மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார்.  புதினங்கள்சிறுகதைகள்புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு மற்றும் பதிப்புத்துறை எனப் பல்வேறு துறைகளிலும் கொடிகட்டி
பறந்த க. குணராசாவின் பங்களிப்பு மிகப்பெரியதாகும்.
இவர், நந்திக்கடல், சித்திரா பௌர்ணமி,ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, காட்டாறு, இரவின் முடிவு, ஜன்ம பூமி, கந்தவேள் கோட்டம், கடற்கோட்டை போன்ற புதினங்களையும் பூதத்தீவுப் புதிர்கள் மற்றும் ஆறுகால்மடம் போன்ற சிறுவர் புதினங்களையும் யாழ்ப்பாண அரச பரம்பரை, நல்லை நகர் நூல் மற்றும் மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் போன்ற வரலாற்று நூல்களையும் ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற ஆய்வு நூலையும் மல்லிகைச் சிறுகதைகள் – 1, மல்லிகைச் சிறுகதைகள் – 2, சுதந்திரன் சிறுகதைகள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், முனியப்பதாசன் கதைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகள் போன்ற தொகுப்புக்களையும் வெளியிட்டார். ஈழத்து எழுத்துத்துறைக்கு அன்னாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாக்கும்.
இவ்படைப்புகளில் வாடகைக்காற்று திரைப்படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது அத்துடன் ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த கிடுகு வேலி அனைவராலும் விரும்ப்பட்ட படைப்பாகும்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்விகற்ற இவர்  பட்டபடிப்பினை பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்றார். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவும், யாழ்பல்களைக்கழகப் பதிவாளராகவும் கடமையாற்றினர் என்பது குரிப்பிடத்தக்கது.அரச இலக்கிய விருது செயலகத்தில். நிகழ்வில் சாகித்திய ரத்னா விருது பெற்ற செங்கை ஆழியான் 75 வது வயதில் 28/02/2016 காலமானார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire