mardi 2 février 2016

அமெரிக்காவின் முக்கிய பதவியில் இந்தியர்

அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் உலக வங்கியின் முக்கிய பதவிக்கு இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
.
உலக வங்கி சார்பில் இயங்கி வரும் போர் பதற்றம், சண்டை மற்றும் வன்முறை உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பான பிரிவின் முதுநிலை இயக்குநராக இந்தியாவைச் சேர்ந்த சரோஜ் குமார் ஜா, உலக வங்கி தலைவர் ஜிம் யங் கிம் நியமித்துள்ளார்.

சரோஜ் குமார் ஜா ஐஐடி கான்பூரில் படித்த முன்னாள் மாணவர். ஜா உலக வங்கியில் கடந்த 2005-ம் ஆண்டு மூத்த உள்கட்டமைப்பு நிபுணராக பணியில் சேர்ந்தார். இவர் அதற்கு முன்பாக ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்ட பணிகளிலும், இந்திய அரசாங்கத்திலும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியவர்.

இதனை தொடர்ந்து, சரோஜ் குமார் ஜா, கடந்த 2012ம் ஆண்டு முதல் உலக வங்கியின் அல்மாட்டி பிரிவின் மண்டல இயக்குநராக பதவிவகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire