dimanche 28 février 2016

வவுனியா தரணிக்குளம் பகுதியில் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம்

வவுனியா தரணிக்குளம் பகுதியில் 13 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரால் நேற்று சனிக்கிழமை இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 5 வயது சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவை தொடர்பான விசாரணைகளைப் வவுனியா மற்றும் கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடந்த 16 ஆம் திகதி வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் 13 வயதுடைய பாடசாலை மாணவில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது. jvp

Aucun commentaire:

Enregistrer un commentaire