dimanche 28 février 2016

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரனதுங்கவை களமிறக்குவதற்குரிய முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

இதற்கான அழைப்பு அமைச்சர் திகாம்பரம் விரைவில்  சந்திரிகா அம்மையாரிடம் விடுக்கவுள்ளார். அத்துடன், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் தொ.தே.சங்கத்தின் விழாவில் கலந்துகொள்ளவுள்ளார். அவர் ஊடாகவே சந்திரிகா அம்மையாரை கலந்துகொள்ள வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.

தனது மகளின் தின நிகழ்வுக்கு வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் முக்கிய பிரமுகர்களைக் களமிறக்குவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தயாராகிவரும் நிலையிலேயே அதற்கு பதிலடியாக முக்கிய பிரமுகர்களை களமிறங்கும் பணியில் தொழிலாளர் தேசிய சங்கமும் இறங்கியுள்‌ளது.

அதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணி ஓர் கூட்டணியாக மகளிர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என விடுக்கப்பட்டிருந்த அழைப்பை அதில் அங்கம் வகிக்கும் மூன்று பிரதான கட்சிகளும் நிராகரித்துள்ளன என்றும் அறியமுடிகின்றது.   karudan news

Aucun commentaire:

Enregistrer un commentaire