mercredi 3 février 2016

இந்திய பாப்பன அரசான வெளிஉறவுத்துறை அமைச்சர் சுஸ்மா இலங்கைக்கு விஜயம்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ் பெப்ரவரி 5ம் திகதி இலங்கை சுதந்திரதினமன்று விஜயம் செய்யவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இலங்கை வரும் சுஷ்மா யாழ்ப்பாணத்திற்கும் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது  பாதுகாப்பு, ஒத்துழைப்பு,தொழில்நுட்பம், கடல்சார் ஒத்துழைப்பு,பொருளாதாரம், வர்த்தகம், மின்வலு எரிசக்தி, சமூக,கலாச்சார கல்வி விடயங்கள், மற்றும் விஞ்ஞானம் தொழில்நுட்பம், சுகாதாரம், உள்நாட்டு விமான போக்குவரத்து சுற்றுலாத்துறை, மக்களுக்கு-மக்கள் தொடர்பு, உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன.இதேவேளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் சுஷ்மா சுவராஜ் வடக்கு முதலமைச்சரை சந்திப்பதோடு வடக்கில் இந்திய அரசின் நிதியுதவியில் அமைக்கப்படும் வீட்டுத்திட்டங்களையும் பார்வையிடவுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire