மூன்றரைக் கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள அறத்தலாவ பிக்குகள் கொலை சித்திரத்தை பார்வையிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சித்திரத்தில் புலிகள் பிக்குகளை தாக்கிய பகுதியை பார்வையிடவில்லை என அவர் நினைவுபடுத்தினார்.
அவ்வாறு அவர் பார்வையிடமால் விட்டமைக்கு காரணம் இம்முறை தேசத்திற்கு மகுடம் ஆரம்பித்து வைக்கச் சென்ற போது, ஜனாதிபதியை வரவேற்றது கருணா அம்மானும் பிள்ளையானும் என மங்கள சமரவீர சுட்டிக் காட்டினார்.
சிங்கள பெளத்தர்கள் என சொல்லிக் கொண்டு முஸ்லிம் மக்களுக்கு இடையூறு செய்வோர் பௌத்த குடிமகன்கள் அல்ல எனவும் அவர்கள் குண்டர் கும்பல்கள் எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இலங்கை பிக்குகளை தாக்கிய அதிதீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு தட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மங்கள சமரவீர இலங்கையில் பௌத்த அதி தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire