சீமானும், சீமானின் நாம் தமிழர்
இயக்கத்தினரும் செய்யும் தமிழ் இனவாத அரசியல் இலங்கைத் தமிழருக்கு
எதிரானதும், ஆபத்தானதும் ஆகும். மிகவும் மெலிதாக முளை விட்டு எழும்
தமிழ்-சிங்கள ஒற்றுமையை வேரோடு அழிக்கும் அரசியல் இது. தமிழ் குறுந்தேசிய
அரசியலை தூக்கிப்பிடித்து, இலங்கையின் மற்றைய தேசிய இனங்களுடன் பகமை
கொண்டு இலங்கைத்தமிழரது வாழ்வையும்,வளத்தையும் சிங்களபேரினவாதிகளிடம் பலி
கொடுத்த தமிழீழ இயக்கங்களின் வலதுசாரி அரசியலை ஒத்தது இது. வெறியோடு
காத்திருக்கும் சிங்கள பேரினவாத சக்திகளிற்கு வெற்றிலை பாக்கு வைத்து
அழைப்பு விடுத்து மறுபடி ஒரு இனக்கலவரத்தையோ, இனப்படுகொலையையோ
தமிழ்மக்கள் மீது கட்டவித்து விடுவதற்கான சந்தர்ப்பங்களை கொடுக்கக் கூடிய
முட்டாள்தனமான அரசியல் இது.
இலங்கைத்தமிழ் அகதிகளை குற்றவாளிகளைப்
போல சிறப்புமுகாம்களில் அடைத்த எம்.ஜி.ஆர் தலைவன், போர் என்றால் மக்கள்
சாகத்தான் செய்வார்கள் என்ற ஜெயலலிதா ஈழத்தாய், இனப்படுகொலை செய்த மத்திய
அரசுடன் பதவி சுகம் கண்ட கருணாநிதி தமிழினத்தலைவர். இவர்களை மாறி, மாறி
ஆதரித்துக் கொண்டு இந்த கள்ளர்கள் ஈழமக்களிற்கு தீர்வை பெற்று தருவார்கள்
என்று மக்களை நம்ப வைத்து கொண்டிருக்கும் இந்த தமிழினவெறியர்கள்
அப்பாவிமக்களிடம் தங்களது வீரத்தை காட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து
கொண்டு தமிழ்நாட்டு தமிழர்களிற்கும், இலங்கை தமிழர்களிற்கும் எதிராக
பேசும், செயற்படும் இளங்கோவன், இந்து ராம், சுப்பிரமணியசாமி, சோ ராமசாமி,
அழித்தவளை அன்னை என்று சேலைக்குள் பதுங்கும் காங்கிசுக்கயவர்கள் எல்லாம்
சுதந்திரமாக திரிகையில் இந்த அப்பாவிகளை அடிக்கிறீர்களே வெட்கமாயில்லை.
Aucun commentaire:
Enregistrer un commentaire