vendredi 6 juillet 2012

சரணடைந்த விடு தலைப் புலிகளின் தலைவர்களை கொலை செய்துவிடுமாறு கோத்தபாய ராஜபட்ச

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட் டப் போரின்போது சரணடைந்த விடு தலைப் புலிகளின் தலைவர்களை கொலை செய்துவிடுமாறு விடுக்கப் பட்ட உத்தரவைப் பின்பற்றியிருந் தால், வவுனியா சிறையில் காவலர் கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்ப ட்ட சம்பவம் இடம்பெற்றிருக்காது என மேஜர் ஜெனரல் பிரசன்ன சில் வாவிடம் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்­ தெரிவித்ததாக லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது வவுனியா வில் சிறைக் காவலர்கள் மூவரைப் பிடித்துவைத்து தமிழ் அரசியல் கைதிகள் போராட்டம் நடத்தியிருந் தனர்.

இத்தகைய சம்பவங்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் செயற் பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற உணர்வை அவ்வியக்கத்தின் சர்வ தேச செயற்பாட்டாளர்களுக்கு ஏற் படுத்தும் எனவும் அவர் பக்கம் கூறி யுள்ளதாக இச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் லங்கா நியூஸ் வெப் மேலும் தெரிவித்துள் ளதாவது,இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேஜர் ஜெனரல் பிரச்ன சில்வா தலைமை தாங்கிய படைத்தரப்பின் 55 வது மற் றும் 59வது படைப்பிரிவுகள் வெற்றி லைக்கேணி கடற்படைப் பக்கமாக வும், முல்லைத்திவில் இருந்தும் படை நகர்வுகளை மேற்கொண்டிரு ந்தன.இறுதிக் கட்டப் போரின் போது மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமையிலான படைத்தரப்பின் 59வது படைப்பிரிவால் கைது செய் யப்பட்ட கடற்புலிகளின் தலைவர்க ளில் ஒருவரான சசிகுமார் என்பவரே வவுனியா சிறைச்சாலையில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவத்தின் போது முன்னிலை வகித்திருந்தார். இப் போரின் போது கைது செய்யப் படுகின்ற மற்றும் சரணடைகின்ற விடுதலைப் புலிகளின் போராளிகள் அனைவரையும் கொலை செய்து விடுமாறு கோத்தபாய ராஜபக்­ படை த்தரப்பின் எல்லாத் தளபதிகளுக்கும் தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டி ருந்தார்.

அம்பலவன்பொக்கனை மற்றும் நந் திக் கடல் பகுதியில் படை நடவடிக் கையில் ஈடுபட்டிருந்த மேஜர் ஜென ரல் கமால் குணரட்ண தலைமையி லான படைத்தரப்பின் 53வது படைப் பிரிவால் கைது செய்யப்பட்ட விடு தலைப் புலிகளின் சார்ள்ஸ் இன்ரனி படைப் பிரிவைச் சேர்ந்த 303 போரா ளிகள் கோத்த பாயவின் உத்தரவுக் கமைய படுகொலை செய்யப்பட் டனர். இறுதிக் கட்டப் போரின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைய முன்வந்த விடுதçலப் புலிகளின் தலைவர்களான நடேசன் மற்றும் புலித்தேவன் போன்றோரை படைத் தரப்பின் 58வது படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய டேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையிலான படைப்பிரிவினர் படுகொலை செய்தி ருந்தார்.ஆனால் படைத்துறைச் செய லாளர் கோத்தபாய ராஜபக்­ விடுத்த உத்தரவை மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா தலைமையிலான படைப்பிரி வினர் பின்பற்றவில்லை.மாறாக கைது செய்யப்பட்ட ஒவ்வொரு விடு தலைப் புலிகளின் போராளிகள் குறி த்த விபரங்களை அவர் புகைப்படங்க ளுடன் பதிவு செய்து இராணுவப் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர் என லங்கா நியூஸ் வெப் வெளியிட் டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டு ள்ளது.

வன்னி யுத்தத்தின் பின்னர் பிரித்தா னியாவுக்கான இலங்கைத் தூதரகத் தில் பாதுகாப்பு ஆலோசகராக பணி யாற்றிய மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீது போர்க் குற்றச்சாட்டுக் கள் சுமத்தப்பட்டதோடு இவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர வில க்குரிமையை நீக்குமாறு கோரி உல கத் தமிழர் பேரவையின் சார்பில் கட ந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி பிரித் தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தாக் கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் நாடு திரும்பியிருந்தார்.இலங் கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது பொதுமக்களை இல க்கு வைத்து திட்டமிட்ட வகையில் மேஜர் ஜெனரல் பிரசன்ன தலைமை யிலான படைப்பிரிவினர் தாக்குதல் களை படைப்பிரிவினர் தாக்குதல் களை மேற்கொண்டதாக பிரித்தானி யாவின் சனல் 4 தொலைக்காட்சியும் குற்றம் சுமத்தி யிருந்தமை குறிப் பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire