dimanche 29 juillet 2012

நூற்றுக்கணக்கான தோட்டக் காணிகள் கையகப்படுத்தப்படுகின்றன: புத்திரசிகாமணி


  நுவரெலியா மாவட்டத்தில் விமான நிலையம், இராணுவ முகாம், விசேட அதிரடிப்படை முகாம்கள் அமைக்க நூற்றுக்கணக்கான தோட்டக் காணிகள் கையகப்படுத்தப்படுகின்றன.

மேலும் தோட்டப்புறங்களிலுள்ள தரிசு நிலங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதில் வெளியார் குடியேற்றப்படலாம். எனவே மலையக தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றிணைந்து அரசுடனும் ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்தி நில அபகரிப்பை ஓரளவாவது தடுத்து நிறுத்த வேண்டுமென முன்னாள் பிரதி நீதி அமைச்சர் வீ.புத்திரசிகாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை காரணமாக ௭திர்காலத்தில் தமிழ் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வெகுவாக குறைவடையலாம். முன்னொரு காலத்தில் ஆட்சியமைப்பது யார் ௭ன்பதை நிர்ணயிக்கும் சக்தியாக நாம் விளங்கினோம் இன்று அந்த நிலை இல்லை ௭ன்றார்..
 _

Aucun commentaire:

Enregistrer un commentaire