jeudi 12 juillet 2012

காலங்காலமாக கூட்டமைப்புக்கு வாக்களித்து எந்த நன்மையையும் பெறவில்லை: கிண்ணையடி மக்கள்



  கிண்ணையடி பிரதேச மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட கூட்டத்தில் கிண்ணையடி பிரதேச மக்கள் தமது பூரண ஆதரவை இம்முறை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருக்கே வழங்குவதாக உறுதி பூண்டுள்ளார்கள்.

காலங்காலமாக கிண்ணையடி பிரதேச மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமது பூரண ஆதரவை வழங்கி வந்த போதும் கிண்ணையடி மக்களுக்கு அவர்களால் இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அந்த வகையிலே ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இம்முறை ஒரு தீர்க்கமான முடிவை எடுத்திருக்கின்றோம்.

இம்முறை நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலிலே தமிழன் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமிழ் மக்கள் அனைவரும் சந்திரகாந்தனுக்கு ஆதரவு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அந்த வகையிலே எதிர்பாராத ஓர் அமோக வெற்றியை சந்திரகாந்தன் பெறுவார்.

அந்த வெற்றிக்காக பாடுபட்ட மக்களின் வரிசையிலே இம் முறை கிண்ணையடி வாழ் மக்களும் பங்கு கொள்வது பெரு மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் அக்கிராம மக்கள் தெரிவித்தார்கள். 
___

Aucun commentaire:

Enregistrer un commentaire