mardi 17 juillet 2012

இந்தியா, அமெரிக்காவால் இலங்கையை அடக்க முடியாது

சீனா காப்பாற்றும் என்கிறார் பிரி.பேராசிரியர்
அமெரிக்காவாலும் இந்தியாவாலும் இல ங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது என பிரித்தானியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். லண்டன் கிங்ஸ் கல்லூரியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பேராசிரியர் ஹார்ஸ் வீ பென்ட் இதனைத் தெரிவித்துள்ளார். த வா´ங்டன் ரைம்ஸ் சஞ்சிகை வெளியிட் டுள்ள இலங்கை தொடர்பிலான பிரதி ஒன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசு என்ன செய்ய வேண்டும் என் பதை ஏற்கெனவே தீர்மானித்து வைத்துள்ளது . அதற்கு இலங்கையில் பெளத்த மக்களி டையே அதிக செல்வாக்கு காணப்படுகின் றது. இந்த நிலையில் அமெரிக்காவோ, இந் தியாவோ சொல்வதைக் கேட்க வேண்டும் என்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இல்லை. சர்வதேச ரீதியாக இலங்கைக்கு ஏதும் தேவை யாக இருந்தால் அரசாங்கம் சீனாவை நாடி செல்கிறது. எனவே இலங்கை மீது அமெரிக்காவும் இந்தியாவும் அழுத்தம் கொடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire