லொறி கவிழ்ந்து செட்டிக்குளத்தில் இராணுவ கொப்ரால் பலி 18 சிப்பாய்கள் படுகாயம்
 மன்னார் - செட்டிக்குளம் வீதியில் செட்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் 30 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒரு இராணுவ கொப்ரால் உயிரிழந்ததோடு 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (17ம் திகதி) காலை 7.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மருதமடு முகாமில் இருந்து புதுக்குளம் முகாமிற்கு இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் கவிழ்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 19 பேரில் இராணுவ கொப்ரால் பலியானதோடு 16 சிப்பாய்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையிலும் 2 சிப்பாய்கள் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறியின் சாரதி ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த சிவிலியன் எனவும் இராணுவத்தினரால் வாடகைக்கு குறித்த லொறி பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் - செட்டிக்குளம் வீதியில் செட்டிக்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் 30 மீற்றர் தொலைவில் இடம்பெற்ற லொறி விபத்தில் ஒரு இராணுவ கொப்ரால் உயிரிழந்ததோடு 18 இராணுவ சிப்பாய்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (17ம் திகதி) காலை 7.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மருதமடு முகாமில் இருந்து புதுக்குளம் முகாமிற்கு இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் கவிழ்ந்து இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 19 பேரில் இராணுவ கொப்ரால் பலியானதோடு 16 சிப்பாய்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையிலும் 2 சிப்பாய்கள் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறியின் சாரதி ஹிக்கடுவை பகுதியைச் சேர்ந்த சிவிலியன் எனவும் இராணுவத்தினரால் வாடகைக்கு குறித்த லொறி பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
Aucun commentaire:
Enregistrer un commentaire