samedi 26 avril 2014

28 பேர் பலி ஈராக்கில் தேர்தல் பிரசார கூட்டத்தில்

ஈராக்கில் வரும் புதன்கிழமை பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அங்கு பிரசாரம் சூடு பிடித்து வருகிறது. கிழக்கு மற்றும் தெற்கு பாக்தாத்தின் இடையே அமைந்துள்ள சாடிகுன் தொகுதியில் அசைப் அஹெல் அல் ஹக் கட்சித் தலைவர் குவைஸ் அல் கஸ்ஸாலி பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டம் உள்ளூர் நேரப்படி இன்று மாலை சுமார் 5 மணியளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு மனித வெடி குண்டும், பின்னர் ஒரு கார் குண்டும் வெடித்ததில் 28 பேர் உடல் சிதறி பலியாகினர். சுமார் 30 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire