jeudi 10 avril 2014

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் பாகிஸ்தானிய இராணுவ தலைமை அதிகாரி…!!

 இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தானிய இராணுவ தலைமை அதிகாரி ரசாக் மொஹமட், இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்கிறார்.

இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையில் நீண்டகால தொடர்பு இருந்து வருகின்றது.

இதன் அடிப்படையில் அண்மையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து பாகிஸ்தான் இலங்கை சார்பாக நிகழ்த்தி இருந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ள நிலைமையை அவர் பார்வையிடுவதற்கு வழி சமைக்கும் வகையில் இந்த விஜயம் இடம்பெறும் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire