samedi 26 avril 2014

தயாளு அம்மாள் ராசா, கனிமொழி, மீதான குற்றப்பத்திரிகை தாக்கல்

2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2ஜி வழக்கில் தொலைத்தொடர்பு துறை நிறுவனமான ஸ்வான் டெலிகாமிடமிருந்து 200 கோடி ரூபாய் கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாறியது குறித்து அமலாக்கப்பிரிவு விசாரித்து வந்தது.
விசாரணை முடிந்துள்ள நிலையில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகையை அமலாக்கப் பிரிவு டெல்லி நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யது.
இந்த குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் பெயரும், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மீதான விசாரணை குறித்து ஏப்ரல் 30ம் திகதி பரிசீலனை செய்யப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire