samedi 5 avril 2014

துன்புறுத்திய இராணுவ அதிகாரிகள் கைது!

பயிற்சி பெற்றுக் கொண்ட பெண் இராணுவ சிப்பாய்களை உயர் அதிகாரிகள் துன்புறுத்தும் காட்சிகள் அண்மையில் இணையத்தில் வெளியிடப்பட்டிருந்ததை தொடர்ந்து இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு இராணுவ அதிகாரிகளையும் இராணுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அது மட்டுமல்லாது கைது செய்யப்பட்ட நான்கு இராணுவ அதிகாரிகளிடமும் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக இராணுவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை குறித்த வீடியோ காட்சிகளில் இருப்பது தமிழ் பெண் இராணுவச் சிப்பாய்களே என்றும் அவர்களே இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளானதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் இந்த குறித்த சம்பவம் 2012ஆம் ஆண்டிலேயே நடைபெற்றதாகவும் இதில் தமிழ் பெண்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் இராணுவம் அறிவித்துள்ளது.


இதே வேளை குறித்த வீடியோ காட்சியானது ஒழுக்க மீறல்களில் ஈடுபட்ட பெண் சிப்பாய்களுக்கு, உயர் அதிகாரிகளால் விதிக்கப்பட்ட தண்டனைக்காட்சிகளே இணையத்தில் வெளியிடப்பட்டிருந்ததாகவும் இராணுவம் தெரிவித்திருந்தது.

Aucun commentaire:

Enregistrer un commentaire