samedi 19 avril 2014

இலங்கையின் முதலாவது வாகன உற்பத்தி தொழிற்சாலை

micro-8வாகனங்கள் உற்பத்தி செய்யும் இலங்கையின் முதலாவது மைக்ரோ தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பொல்கஹவல தொழில் பேட்டையில் திறந்துவைத்தார்.
அத்துடன் தொழிற்சாலையையும் ஜனாதிபதி சுற்றிப் பார்வையிட்டார். மைக்ரோ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லோரன்ஸ் பெரேரா தமது நிறுவனத்தின் புதிய உற்பத்தியான ‘டுவர் வெகன்’ வாகனத்தை ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
பங்களாதேஷுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள மைக்ரோ வாகனங்கள் தொடர்பான ஆவணங்களையும் அவர் ஜனாதிபதியின் பார்வைக்குச் சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்வில் பிரதி நிதியமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம, கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire