jeudi 23 octobre 2014

தீபாவளி பண்டிகை மது விற்பனை ஒரே நாளில் மட்டும் ரூ.120 கோடி

தீபாவளி பண்டிகை என்றால் புத்தாடை, நகை, பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்குவது தான் பிரதானமாக இருக்கும். இப்போது மது விற்பனை இவற்றையெல்லாம் மிஞ்சிவிட்டது. தமிழகத்தில் 6,800 அரசு மதுபானக் கடைகளான டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடைகளில் தீபாவளி பண்டிகையான நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.120 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக அதிகாரி கூறியுள்ளார்.அதே நேரத்தில் சென்னையிலும் சுமார் ரூ.21 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இந்த மது விற்பனை கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire