samedi 25 octobre 2014

இலங்கையின் மிகச்சிறந்த நூல் நிலையத்துக்கான விருது மட்/பேத்தாழை நூலகம் தெரிவாகியுள்ளது.

இலங்கையின் மிகச்சிறந்த நூல்  நிலையத்துக்கான விருதுக்காக   மட்/பேத்தாழை நூலகம்  தெரிவாகியுள்ளது. அதன்படி இலங்கையின் பிரதேசசபைகளால் நடத்தப்படும் நூலகங்களுள் முதன்மையானதாக செயல்படும் நூலகங்களுக்கு  வழங்கப்பட்டுவரும்  சுவர்ண புரவர விருது இந்நூலகத்துக்கு கிடைத்துள்ளது. 2013ம் ஆண்டுக்கான தனது திறமையான சேவைக்காகவே இவ்விருது வழங்கப்படுகின்றது.
மேற்படி நூலகம் கடந்த கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த நூல் நிலையமானது சிறந்த இலக்கிய, வரலாற்று,அரசியல்,  நூல்களை கொண்டு வாசகர்களுக்கு மிகச்சிறந்த சேவையை ஆற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire