vendredi 22 janvier 2016

ஜான்சிராணி மகிளா காங்கிரஸ் புதிய தலைவராக

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் புதிய தலைவராக மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பொன்னம்மாளின் பேத்தி ஜான்சிராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்த விஜயதாரணி எம்எல்ஏ அப் பொறுப்பிலிருந்து இன்று மாலை நீக்கப்பட்ட பின்னர் உடனடியாக ஜான்சிராணி நியமிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதை ஷாக்கிங் சர்ப்ரைஸ் என்றுதான் சொல்ல வேண்டும். சோனியா அம்மா, ராகுல்ஜி, ஷோபா உஷா, மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மேலும் அவர் கூறுகையில், 'என் பாட்டி பொன்னம்மாள்தான் எனக்கு அரசியலில் ரோல் மாடல். அவரைப் பார்த்துப் பார்த்தே நான் என் அரசியல் பயணத்தை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அவர், அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் அன்பாகவும், கண்ணியமாகவும் பழகியவர், அனைவருக்கும் பிடித்தமானவர். அவர் விட்ட இடத்தை கண்டிப்பாக நான் பிடிப்பேன். என் குடும்பம், கணவர் என்று அனைவருமே காங்கிரஸ் பாரம்பர்யம் கொண்டவர்கள்தான், அதனால், குடும்ப ஆதரவு முழுமையாக இருக்கிறது. நிச்சயமாக தலைமையின் வழிகாட்டுதலில் எதையும் செய்ய தயார் நிலையில் இருக்கிறேன். என்னை நம்பிக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பை உணர்ந்திருக்கிறேன், அதன்படி செயல்படுவேன்
எனக் கூறினார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire