dimanche 3 janvier 2016

ஜெயலலிதா அதிமுக துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நீக்கம்

சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த, அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணைச் செயலர், நாஞ்சில் சம்பத், அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.வைகோ தலைமையிலான, ம.தி.மு.க., வில், கொள்கை பரப்பு செயலராக பதவி வகித்த நாஞ்சில் சம்பத், அக்கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க., வில் இணைந்தார். அவருக்கு, கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலர் பதவி வழங்கப்பட்டது.இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்பத், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த தகவலை அடுத்து, அவர், கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அ.தி.மு.க., பொது செயலர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.   நாட்டில் இவர்களின் செய்யும் சுயநலன்களுக்கான போட்டியினை மக்கள் நலனுக்கானது என நம்புவது எப்படி                                                                                                                                                         

Aucun commentaire:

Enregistrer un commentaire