mardi 24 décembre 2013

செட்டிகுளம் பிரதேச சபையில் வாகன, நிதி மோசடிகள்

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச சபையில் இடம்பெற்ற மோசடி சம்பவம் ஒன்று தொடர்பில் வட மாகாண கணக்காய்வு குழு கண்டுபிடித்துள்ளது. வாகனங்கள் மற்றும் நிதி மோசடியே இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் பிரதேச செயலாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த மோசடி சம்பவம் மற்றும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதா என்பன தொடர்பான விரிவான அறிக்கையை வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி கோரியுள்ளார். வட மாகாண சபையின் கணக்காய்வு குழுவின் அறிக்கை இரண்டு வார காலங்களில் கிடைக்கப்பெற்ற பின்னர் இது தொடர்பில் மாகாண பொது சேவைகள் ஆணைக் குழுவுன் கவனத்திற்குக் கொண்டு வரவுள்ளதுடன், விரிவான விசாரணைகளை மேற்கொள்ள விசேட விசாரணைக் குழுவொன்றையும் நியமிக்கவுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடையவர் இலங்கை நிர்வாக சேவை அதிகாரி என்பதால் மாகாண பொது சேவைகள் ஆணைக்குழுவின் ஊடாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு உறுதிப்படுத் தப்படும்பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநர் தயாராகவுள்ளர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire