mercredi 4 décembre 2013

நேரடி தொடர்பிருந்தது, புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இரா.சம்பந்தே

விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத்துக்கம் நேரடி தொடர்புகள் காணப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஆனால் விடுதலைப் புலிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்புகளை பேணவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்காக இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் இருந்தது.
ஆனால் இதற்கு புறம்பாக விடுதலைப் புலிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எந்த தொடர்பும் இல்லை.
ஆனால் 2005ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, விடுதலைப் புலிகள் இயக்கம் தற்போதைய அரசாங்கத்துக்கு சார்பாக செயற்பட்டனர்.
அதேபோன்று குமரன் பத்மநாதன், பிள்ளையான், கருணா போன்ற முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகளும் தற்போது அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் உள்ளனர்.
எனவே அரசாங்கம்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது கல்லெறிய வேண்டாம் என்று சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire