dimanche 6 mai 2012

மெக்ஸிக்கோவின் நுயவோ லாரெடோ நகரில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட 23 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சடலங்களில் சில பாலமொன்றில் தொங்கவிடப்பட்ட நிலையிலும் ஏனைய சடலங்கள் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும் வீதியோரமொன்றில் கைவிடப்பட்ட நிலையிலும் காணப்பட்டன.

பாலத்தில் தொங்கவிடப்பட்டிருந்த 9 சடலங்களில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.

இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டு சில மணி நேரத்தில் வாகனமொன்றில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 14 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

நகர மேயரின் அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அந்த மேற்படி வாகனத்திலிருந்த பனிக்கட்டி பெட்டிகளிலேயே இந்த சடலங்கள் வைக்கப்பட்டிருந்தன.

தூக்கில் தொங்கவிடப்பட்ட சடலங்களுடன் காணப்பட்ட துண்டுக் குறிப்பில் போதைவஸ்து குழுவினரால் கொல்லப்பட்ட வளைகுடா போதைவஸ்து குழு உறுப்பினர்கள் என குறிப்பிட்டிருந்தது.

Aucun commentaire:

Enregistrer un commentaire