mercredi 9 mai 2012

ஆளுங்கட்சிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் இருப்பதாக சந்திரகாந்தன் கூறுகிறார்



  கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சந்திரகாந்தன், மத்திய அரசின் துணையமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் சில கிழக்கு மாகாண தலைவர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடந்துள்ளது

இப்போது இருக்கும் அரசியல் களச்சூழ்நிலையில் தற்போது தேர்தலை நடத்தினால் பெருவாரியான வெற்றியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் தேர்தல் நடத்தும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்ததாக சந்திரகாந்தன் கூறினார்.
கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் தான் முடிவடைகின்ற நிலையில், அப்போதே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று முன்னதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவைக்காக அந்த தீர்மானத்தை மீண்டும் மாற்றியமைக்கும் அதிகார பலம் தம்மிடம் இருப்பதாகவும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் அடுத்த முதலைமைச்சராக வர வேண்டியவர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவரா அல்லது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரா என்பதை அவர்கள் பெறும் வாக்குபலம் தான் தீர்மானிக்கும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்  தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire