mercredi 16 mai 2012

இன்னும் இரு நாட்களில் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார்

எதிர்வரும் இரு தினங்களுக்குள் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என தான் நம்புவதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து இன்று (16) காலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துரையாடியதாக டிரான் அலஸ் அத தெரணவிடம் தெரிவித்தார். 

இன்னும் சிறு சிறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் அதனை இன்னும் இரு தினங்களில் தீர்த்துக் கொள்ள முடியும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய ஜனாதிபதி எவ்வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை எனவும் அனைத்தும் பேச்சுவார்த்தையின் விளைவே எனவும் டிரான் அலஸ் தெரிவித்தார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire