dimanche 20 mai 2012

அரசாங்கம்.யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா

வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு விழா இன்று காலி முகத்திடலில் நடைபெற்றது.

இதில் சர்வமத தலைவர்கள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி காலி முகத்திடலுக்கு வருகைத்தந்ததைத் தொடர்ந்து தேசிய வெற்றி விழா ஆரம்பமானது. 

மேள வாத்தியங்கள் முழங்க ஜனாதிபதி தேசிய கொடியை ஏற்றினார். தொடர்ந்து முப்படையினர் மற்றும் பொலிஸாரின் அணி வகுப்பை ஜனாதிபதி பார்வையிட்டார்.

ஜனாதிபதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. நாட்டுக்கு உயிர்த் தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Aucun commentaire:

Enregistrer un commentaire