mardi 29 mai 2012

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயற்படும் அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம்

ராகுல் மக்கள் சேவகர் பேரவை சார்பில் சென்னை அண்ணாசாலை மின்வாரிய பணியகத்துக்குப் பின்புறம்  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. 

ராஜிவ்கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு உடனடியாக தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்றும், ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தியும், மூவருக்கும் மரணதண்டனை விதித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை விமர்சித்தும், நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire