mercredi 23 mai 2012

பேரினவாதி பேரினவாதிக்கே சூளுரை

மகிந்த ராஜபக்­வின் அராஜக ஆட்சி யைக் கவிழ்பதுதான் எனது ஒரே இல க்கு. இவ்வாறு நேற்று சிறை மீண்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சூளுரைத்தார்.நேற்று மாலை சிறையில் இருந்து விடு தலை பெற்ற அவர் மக்கள் மத்தியில் உரையாற்றும்போதும் அதற்கு முன் நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரைநிகழ் த்தும் போதுமே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரி விக்கையில், மகிந்த அரசின் பழி வாங்கல் நிமித்தம் சிறை சென்ற என்னை, இன்னும் 10 வருடங்கள் தடுத்து வைத்திருந்தாலும் என்னு டைய தைரியம் ஒருபோதும் சிதறி யிருக்க மாட்டாது.

எனக்காக மக்கள் சிந்திய கண்ணீரை நான் ஒருபோதும் மறந்துவிட மாட் டேன். எனக்கு நேர்ந்த அசாதாரணத் துக்காக மக்கள்பட்ட வேதனையை யும் மறந்துவிடமாட்டேன். இன்று முதல் மக்களுக்கான எனது பணி மீண்டும் தொடரப் போகின்றது. எமது மக்களுக்காக என்னை நான் தியாகம் செய்வேன்.மக்கள் எனக்கு பாரிய தொரு சக்தியினை வழங்கியுள்ளார் கள். அரசியல் பழிவாங்கல்களுக்கு உட்பட்ட எனக்கு நியாயம் கிடைக்க எனது மக்கள் என்னோடு தொடர்ந் தும் இருக்க வேண்டும்.

வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக நான் இருப்பேன். படையினர் இந்த நாட்டுக்கு பெற்றுக் கொடுத்த வெற்றி யினை தொடர்ந்து பாதுகாப்பேன். மக்கள் மத்தியில் சந்தோ­மும், சமா தானமும் நிலைத்து நாட்டில் ஜனநா யகமான ஆட்சியை கொண்டு செல்ல நாம் அனைவரும் இணைந்து பாடுப டுவோம். நான் மீண்டும் இந்த நாட்டு க்காக என்னை தியாகம் செய்வேன். என் உயிரைக் கொடுத்தேனும் எம் மக்கள் சந்தோ­மாக வாழ வழி அமை ப்பேன்.

மகிந்த அரசின் இந்த அராஜக ஆட்சி யை கவிழ்ப்பது தான் எனது ஒரே இலக்கு. நான் எவரிடமும் மண்டியி டப் போவதில்லை.சிறையில் என் னை அடைத்து என்னை அடக்கி விடு வதற்கு மகிந்த அரசு கடந்த காலங்க ளில் முயற்சி செய்தது. அது முடியா மற் போனதால் இவ்வாறான நடவ டிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனது உடல்நிலை ஆரோக்கியமான நிலை க்குத் திரும்பியிருக்கிறது. எனக்காக பாடுபட்ட எனது நாட்டு மக்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சரத் பொன்சேகா தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire