dimanche 13 mai 2012

பீரிஸ் தலைமையிலான குழு இன்று வா´ங்டனுக்கு பயணம் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு சாதகமாகுமாம்

ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமை கள் ஆணைக்குழுவின் கடந்த கூட் டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானத்திற்கு பொறுப்புக் கூறக்கூடிய வகையிலான முழுமையான செயற்றிட்ட வரை பினை அமெரிக்கா எதிர்பார்க்கின்ற நிலையில், அதனை ஈடுசெய்யும் வகையிலேயே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வா´ங் டன் பயணம் அமையும் என தெரிய வருகின்றது.

அமெரிக்காவில் நான்கு நாட்கள் தங் கியிருக்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் தலைமையிலான அரச தரப்பு குழுவினர் அந்நாட்டின் இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளி ன்டனுடன் எதிர்வரும் 18 ஆம் திகதி முக்கிய பேச்சுக்களை நடத்தவுள் ளார்.

இதன்போது அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப்படுத்துவ தற்கான செயற்திட்ட வரைபைக் கையளித்து பீரிஸ் தலைமையி லான குழுவினர் பேச்சுவார்த்தை களை முன்னெடுக்கவுள்ளனர்.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக் குழுவின் கடந்த கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மீதான தீர்மானம் மற்றும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத் துவதற்கான முழுமையான செயற் திட்ட வரைபு போன்றவற்றை மைய ப்படுத்தியே பீரிஸுடனான பேச்சு வார்த்தையினை ஹிலாரி கிளின்டன் முன்னெடுக்கப்பார் என எதிர்பார்க்கப் படுகின்றது.

அத்துடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரிக ளையும் சந்தித்து அரசதரப்பு குழுவி னர் விளக்கமளிக்க உள்ளதாக வெளி விவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கையின் நல் லிணக்கம் தொடர்பாக பேசுவதற்கா கவும் அதற்கான பொறுப்புணர்வுட னுமே வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அமெரிக்கா வரவேண்டும் என அந்நாட்டு இராஜாங்கத் திணைக் களத்தின் பேச்சாளர் விக்டோரியா நூலண்ட் ஊடகவியலாளர்களை சந் தித்தபோது கூறியிருந்தார். வெளிவி வகார அமைச்சர் பீரிஸ் தலைமை யிலான அரச தரப்புக்குழு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன் றை மேற்கொண்டு நாளை திங்கட் கிழமை அமெரிக்கா செல்லவுள்ளது. இக் குழுவில் ஜனாதிபதியின் செய லாளர் லலித் வீரதுங்க, நாடாளும ன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குண வர்த்தன மற்றும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளமை தெரிந்ததே.

Aucun commentaire:

Enregistrer un commentaire