mercredi 11 mai 2016

மே மாதம் 13 மாலை 4:00 மணிக்கு தமிழினியின் நூல் சிங்களத்தில் வெளியீடு!!!?

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித்தலைவி தமிழினியின் “ஒரு கூர் வாளின் நிழலில்” நூல் சிங்களத்தில் வெளியிடப்படுகிறது.

சாமிநாதன் விமல் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வை “தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” ஒழுங்கு செய்திருப்பதாகத் தெரியவருகிறது. மேலும் இந்த நூலை சிங்களத்தில்  மொழிபெயர்க்கும் முயற்சிகளில் தமிழினியின் கணவர் மேற்கொண்டிருப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில் தமிழில் காலச்சுவடு வெளியிட்ட நூலில் “தமிழினி” என்று மட்டுமே முகப்பில் இருந்தது. ஆனால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நூலின் முகப்பில் "தமிழினி ஜெயகுமாரன்" என்று இருக்கிறது.

ஏற்கெனவே தமிழினியின் “கணவர்” குறித்த சர்ச்சையான தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையின் இந்த வெளியீடு பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

இதனை வெளியிட்டிருப்பது என்னவோ பிரபல சிங்கள இயக்குனரும், பிரமுகருமான தர்மசிறி பண்டாரநாயக வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.

மே மாதம் 13 மாலை 4:00 மணிக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் இதன் வெளியீடு நடத்தப்படுவதாக சிங்களத்தில் செய்திகளும் வெளியாகியுள்ளன.


Aucun commentaire:

Enregistrer un commentaire