mardi 10 mai 2016

இந்தியாதான் எனது நாடு, இந்தியாதான் எனது வீடு சோனியா காந்தி

இந்தியாதான் எனது நாடு, இந்தியாதான் எனது வீடு என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கேரளா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், திருவனந்த புரத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் சோனியா காந்தி.
அப்போது பேசிய அவர், தாம் இந்தியாவில் இந்திய பெண்மணியாக வசிக்க ஆரம்பித்து 48 ஆண்டுகள் ஆகின்றன என்று கூறியுள்ளார். கடந்த 48 ஆண்டுகளில் இந்தியாதான் எனது நாடு, இந்தியாதான் எனது வீடு என்றே வாழ்வதாகவும், வாழ்வின் கடைசி மூச்சு
இந்தியாவில்தான் இருக்கும் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்தியாவில்தான் தமது ரத்த சொந்தங்கள் வாழ்வதாக உணர்வதாகவும், இதை பிரதமர் மோடியால் புரிந்துக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire