vendredi 20 mai 2016

இலங்கையில் உள்ள மிகமோசமான பயங்கரவாதிவிக்னேஸ்வரன் தான்;மத உறுமய


இலங்கையில் உள்ள மிகமோசமான பயங்கரவாதி வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நேற்று அத்திட்டிய மிஹிந்து செத் மதுரவில் நடைபெற்ற படைவீரர் நினைவு நிகழ்விலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். Ippv
எமது படைவீரர்களின் யுத்த வெற்றியை மலினப்படுத்தக் கூடாது. ஒட்டுமொத்த இலங்கையர்களுக்காகவுமே படைவீரர்கள் உயிர்த் தியாகம் செய்தார்கள். வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மிக மோசமான பயங்கரவாதியைப் போன்று செயற்படுகின்றார் என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire