lundi 16 mai 2016

இலங்கை கடற்படையால் தமிழகத்தின் பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Résultat de recherche d'images pour "தமிழக மீனவர்"இலங்கை கடற்படையால் தமிழகத்தின் பாம்பன் நாட்டுப் படகு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் 8 பேர் குட்டி ரோந்துக் கப்பல்களில் வந்ததாக தமிழக ஊடகமான மாலை மலர் குறிப்பிட்டுள்ளது. 
அவர்கள் நாட்டுப் படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்து விரட்டியடித்தனர் எனவும், இதையடுத்து மீனவர்கள் அவசர, அவசரமாக அந்த பகுதியை விட்டு செல்ல முயன்றபோது, மீனவர்கள் இன்னாசி, சேசு, டைசன் ஆகியோருக்கு சொந்தமான 3 படகுகளில், இலங்கை கடற்படையினர் வலைகளை வெட்டிவிட்டு அந்த படகுகளையும் அவற்றில் இருந்த மீனவர்களையும் பிடித்து இலங்கை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர் எனவும் அந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது. 
அங்கு விசாரணைக்கு பின்னர் எச்சரிக்கை செய்து மீனவர்களை விடுவித்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து மீனவர்கள் கரை திரும்பினர். 

Aucun commentaire:

Enregistrer un commentaire